×

மாவட்டம் முருகன் திருக்கல்யாணம்

வத்திராயிருப்பு, நவ. 15: வத்திராயிருப்பில் நேற்று நடந்த முருகன் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பு காசி விசுவநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியசாமி கந்தசஷ்டி விழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. அன்று மாலை கணபதி ஹோமம், திருப்புகழ் இசை அமுதம் நடைபெற்றது. தினசரி பகல், இரவில் பக்தி இன்னிசை, ஆன்மிகச் சொற்பொழிவு, பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 13ம் தேதி மாலை 4.35 மணியளவில் வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடல் முன்பு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 11 மணிக்கு மேல் முருகன் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சுந்தரராசு, கந்த சஷ்டி விழாக்குழு அமைப்பாளார் கதிரேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags : District ,Murugan Thirukalayana ,
× RELATED சித்தூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்